Sunday, February 08, 2009

522. கலைஞர் டிவி வாழ்க!

சேனல் சர்ஃபிங்க்கு நடுவில் 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில் 4-5 நிமிடம் நின்றேன்.. ஒரு போட்டிக் குழு சிறப்பாக பரதநாட்டியத்தில் சிவநடனம் ஆடி முடித்த பின் அது பற்றி நடுவர்கள் பேச ஆரம்பித்தனர்..

நடுவர்களில் ஒருவரான ரம்பா சிவ நடனங்களின் வகைகள் பற்றிச் சொல்ல ஆரம்பிக்க, கலா மாஸ்டர் ஓ உங்களுக்கு மந்திரம் எல்லாம் தெரியுமா என்று கேட்க, ரம்பா கொஞ்சம் வெட்கப் பட்டுக் கொண்டு அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல, ஆனால் நான் சிவ பக்தை என்றார்.. உடனே கலா மாஸ்டர் நீங்கள் கூறி வழிபடும் மந்திரம் ஒன்றை எங்களுக்காக சொல்லித் தான் ஆகவேண்டும் என்று ரொம்பவே வற்புறுத்தினார்..

உடனே, ரம்பா தன் இருக்கையிலேயே கண்களை மூடி, கைகளைக் குவித்து இதழில் தவழந்த மந்தஹாசம் மறையாமல், சொல்ல ஆரம்பித்தார்.. "சதுர்பி: ஸ்ரீகண்டை: சிவயுவதிபி:" என்ற சௌந்தர்ய லஹரி சுலோகத்தை பக்தி பாவத்துடனும், சில உச்சரிப்புப் பிழைகளுடனும் சொன்னார்..

அதற்குப் பிறகு 28 சிவ தத்துவங்களைக் கூறும் மந்திரம் ஒன்றையும் சொல்லி முடித்தார். பிறகு சில நொடிகள் கழித்து கண் திறந்தார்.

கலா மாஸ்டர் கரகோஷம் செய்தார். பார்வையாளர்கள் அதில் இணைந்தனர். நல்ல கடவுள் பக்தி இருக்கும்மா உனக்கு, ரொம்ப நல்ல விஷயம் என்று கலா மாஸ்டர் ஆசிர்வதித்தார்.

இந்த நிகழ்ச்சியில், இப்படி ஒரு சம்பவம், நான் எதிர்பார்க்கவில்லை. மகிழ்ச்சியாக இருந்தது.

தங்கள் இந்துத் தன்மையை எந்தக் தயக்கமும் இல்லாமல் பிரபலங்கள் வெளிப்படுத்திய இந்த நிகழ்ச்சி வந்தது .... கலைஞர் டிவியில்! வாழ்க!

3 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test !!!

Vijay said...

போச்சு போச்சு, அடுத்த மானாட மயிலாட எபிசோடுக்கு ரம்பாவுக்கும், கலா மாஸ்டருக்கும் கல்தா கொடுத்துடப் போறாங்க :-)

RAJI MUTHUKRISHNAN said...

That is a nice feel good post.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails